Thursday, April 28, 2011

" அன்புள்ள தோழனுக்கு "




எந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது
என்று கோலங்களை வரையறை செய்ய இயலாதோ... 
அது போல தான் நான் உன் மீது கொண்ட நட்பும்... 
எதிலிருந்து இணைந்தது என்று சொல்ல இயலாது...
நம் நட்பின் ஆரம்பத்தில் பெரிய மகத்துவம் ஏதும் இல்லை... 
ஆனால் அதன் பிறகான நாட்களில் ஒர் கவித்துவமும் கை 
கோர்த்து நடந்து கொண்டிருக்கிறது....

யாரென்று அறியாமல்..
பெயர் கூடத் தெரியாமல்..
முதலில் எங்கு தொடங்குவது..
பல கேள்விகளுக்கு இடையே
மெல்லியதாய் பூத்தது 
புன்னகை அரும்பு
நம் இதழ்களில்...
அது தான் விதையோ....????
இன்று வேரூன்றி 
விருட்சமாகி நிற்கிறது
நம் நட்பு...

எண்ணங்களில் அன்பினை 
அருதியிட்டு கூற இயலாது....
நான் கொண்ட நட்பும் அன்பும் என்றும் மாறாது..... 
இவ்வுலகில் வானும் மண்ணும் 
மாறும் காலம் என்றாகிலும் ஏற்படுமா...??
அது போல தான்
 நான் உன் மீது
 கொண்ட நட்பும்...?

ஒரு நாள் ....
என் பாதத்தின் பயணம் 
நிறைவடையலாம்...
என் விழிகளின் 
தேடுதல் அனைத்தும்
ஓய்வெடுத்துக் கொள்ளலாம்...
என் இதயத்தின் துடிப்பு
அடங்கவும் கூடும்....
என் இளமையின் 
வேகமும் தளர்ந்து போகும்....
ஏன் இந்த உலகமே கூட
அழிந்து போகும்....
ஆனால் ...
அப்போதும் என் ஸ்வாசமும்...
என் நட்பும்.... 
உன்னைத் தேடி மட்டுமே
அலைந்து கொண்டிருக்கும்....
மீண்டும் உன் நட்பை உயிர்பித்துக் கொள்ள....!!!

உள்ளங்கள் பிரிந்தாலும்..
என் உறவுகள் முறிந்தாலும்...
நினைவுகள் என்றும் பிரிவதில்லை..!!
நிகழ் காலம் மாறினாலும்..
வருங்காலத்தில் மலரும்
உன்னதமான் அன்பல்லவா நட்பு...!!
அது என் நெஞ்சில் நிற்கும் உயர்வான சொந்தமல்லவா...!!
என் உயிர் இருக்கும் வரையிலும் 
என் உடன் இருக்கும் சொந்தம் நீ....

தித்திக்கும் நட்பினில் திகட்டாமல் அன்பு செய்யத் தெரிந்தவள் நான்...
அன்பு என்னும் உணர்வு அஹிம்சா சக்தியின் உயிர்ப்பு....!!!

கடந்து வந்த வயதினில் 
கரைந்து போன நிமிடங்களின் 
நிகழ்வுகள் 
மனதின் நினைவினை விட்டு 
அகலாமல் பதிந்து விட்டது
என் நினைவு தேசத்தில்... 
நினைவு தேசத்தின் 
பாதச் சுவடுகளை அழிப்பது சுலபமல்ல..

ஏதோ ஒரு பறவையின் 
தொலைந்து போன
சிறகானது .....
காற்றோடு பேசிக்கொண்டே...
காற்றின் தீர்ந்து விடாத 
பக்கங்களில் எல்லாம் 
தன்னைப் பற்றி 
எழுதிச் செல்கிறதாம்....
அது போலவே...
வாழ்வும் 
நிகழ்ந்து முடிந்து விட்ட 
நிமிடங்களை..
அதன் முற்றுப் பெறா பக்கங்களில் 
எழுதிக் கொண்டு தான் இருக்கிறது...

உன்னில் கொண்ட நட்பும் 
பொறிக்கப்பட்ட கல் வெட்டாகத் தான்...
அழித்தல் என்பது நடவாத காரியம்...
சாம்பலிலும் உயிர்பிக்கும் 
பீனிக்ஸ் பறவையாக 
மீண்டும் மீண்டும் 
உயிர்பிக்கும்...
நம் நட்பு....
என் சாம்பலிலும்....!!!!




பல ஜென்மங்கள் 
கடந்த பின்னும்.. 
மீண்டும் மீண்டும்
வேண்டும் நட்பு இது..!!

பிறிதொரு நாளின் அமைதியான இரவினில் உன்னைப் பற்றி மேலும் பேச முற்படும் என் எண்ணங்கள்...
கவிதையின் வடிவினில்... 
அதற்கான முன்னோட்டம் தான் மேற்கண்ட வரிகள்...

என் நினைவேட்டின் பக்கங்கள் உன்னை பற்றி நிறைத்த வண்ணம் தான்..
என் எண்ணத்தில் நிறைந்திருக்கும் உன் வண்ணங்கள் மட்டுமே என் இதயத்தின் ரணங்களுக்கு மருந்தாகிறது....

வார்த்தைகளற்றதொரு வாக்கியத்தில் நிறைவு செய்கிறேன்.....


 காற்றும்
இசையாகும்..
அழகானதொரு 
வாசிப்பில்..
வார்த்தைகளும்
கவிதையாகும்
அழகானதொரு 
நேசிப்பில்...
உலகமும் 
என் வசமாகும்
உன் அழகான 
புன்சிரிப்பில்...!

கனா காலம்..

நீண்டு கொண்டே
செல்கிறது என் 

"கனா காலம்"

சின்ன சின்னதாய் 
கெஞ்சல்ஸ்..
சிறுக சிறுக 
கொஞ்சல்ஸ்..
அளவாய் கோபம்..
பார்வையில் மிரட்சி..
பேச்சில் மிரட்டல்...
வசீகரம்.. சிரிப்பு..
மொத்தத்தில் எது
எப்படியோ..?
உன் உணர்வின் மொழி
அனைத்தும் நீண்டு கொண்டே
செல்கிறது.. என்

  "கனா காலத்தில்"
நிதமும் செய்யும் 

ஒவ்வொரு செயலும்


உன்னையே நினைவு படுத்தி


முட்டி மோதி


சண்டையிட்டு


அழுது புலம்பி...


விழுந்து விட்ட முடிச்சுகளை


அவிழ்க்க முடியாது 


அமைதியாகும் மனம்..


மீண்டும் ஒரு வரம்


உன் சந்திப்பு..


நலம் விசாரிக்கிறாய்


அக்கறையோடு


சிறு மாற்றம் தான்..


முன்பெல்லாம்


அதிகாரம், கோபம், கண்டிப்பு,


அரவணைப்பு, காதல், குறை ஏக்க
ம்

எல்லாம் இருக்கும்.
.
இன்று கண்ணீர் தவிர


ஏதுமின்றி நட்பின் போர்வையில்


நினைவு மரத்து தொடர்கிறாய்


உன் விசாரிப்புகளை..!!




Wednesday, April 13, 2011

கைபேசியில் பதிவானது " காதல் "


கை பேசியில் 
பேசியதென்னவோ
நீதான் ...
ஆனால் 
பதிவானதென்னவோ
காதலாகி
போனது...


கை பேசி அழைப்பை
துண்டித்த மறு 
நொடியில்
மீண்டும் அழைப்பு
வருமோ..
என காத்திருக்க
தொடங்கிவிடுகிறது
மனது..

நீ அனுப்பும் குருஞ்செய்திகளோடு
சேர்த்தே அனுப்புகிறாய்
உன் பிரியங்களையும்..

சில நேர கைபேசி
சண்டைகளில்
விட்டுக் கொடுப்பது
நீயாகவே
இருந்திருக்கிறாய்..

அதன் சமாதான
வார்த்தைகளில்
தெரிக்கத் துவங்கிவிடுகிறது
உனதன்பு...

நீ அழைத்து
பேசிய நிமிடங்களையும்
நான் அழைக்காமல் 
விடுத்த நிமிடங்களையும்
பதிவு செய்தே வைத்திருக்கிறது
என் கைபேசி...

இப்போதெல்லாம்
நீ அழைத்து பேசும் 
நிமிடங்களுக்காய்
காத்திருக்கத் துவங்கி விட்டோம்
நானும் எனது 
கை பேசியும்...

" முத்தத்தின் யுத்தம் " - 5


முத்தங்களால் 
கைது செய்து
முத்தங்களால்
 என்னை கொன்ற
மொத்தக் கொலைகாரன் 
நீ


என்றோ
ஒரு இரவில்
வந்த கனவில்
ஓடிக் கொண்டிருந்த
என்னை..
கை இழுத்து
கட்டி அணைத்து..
மற்றவர் 
பார்க்கும் முன்
விலகிச் சென்றாய்..
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
ஈரமாக்கினாய்
இதழ்களை..
இன்னமும் 
காத்திருக்கிறதடா
ஈர இதழ்கள்...
பெற்றதை 
திருப்பிக் கொடுக்க....!!

Tuesday, April 12, 2011

" முத்தத்தின் யுத்தம் " - 4



உன்
ஒவ்வொரு
கண் அசைவிற்கும்
ஒரு முத்தம் கேட்கிறாயே...
என் 
மொத்த அசைவிற்கும்
எத்தனை 
முத்தம் தருவாய்
நீ..?



காற்று கூட 
நம்மை 
பிரித்து விடக்கூடாது
என்றாய்..

நீ 
அனுப்பிய
பறக்கும் முத்தம்
மொத்தமும் எடுத்துக்கொண்டு
என்னையல்லவா கேலி
பேசுகிறது 
காற்று...




Monday, April 11, 2011

" முத்தத்தின் யுத்தம் " - 3


சும்மா
ஒரு முத்தம் கேட்கிறாய்..
எனக்குத் தெரியாதா
சிறு முத்தத்தையும்
பெரியதாக்கும்
வித்தைக்காரன்
நீ என்று...
 
 
உனக்கான காத்திருப்பில்..
என்
கோபங்களை
கொட்டித் தீர்க்க
முற்பட்டால்
நீ
மௌனமாய்
கொட்டித் தீர்க்கிறாய்
உன் காதல் அனைத்தையும்
ஒற்றை முத்தத்தில்..

என்                                                       
அளவில்லா கோபத்தையும்
வென்று விடுகிறதடா
உன் 
ஒற்றை முத்தம்....

" முத்தத்தின் யுத்தம் " - 2



"மொத்தத்தில் 
முத்தத்தின் ருசி 
எப்படி இருக்கும்..?"
கேட்கும் போதே   
ருசிக்கச் சொல்கிறது
 இதழ்கள்..



சத்தமின்றி
"மௌன மொழி"
பேசுகின்றன இதழ்கள்..
ஒரு முத்தத்திற்கும்
மற்றொரு முத்தத்திற்கும்
இடையே விழும்
சிறு இடைவெளியில்
இமைகளான 
உதடுகளின் வரிகள்
படிக்கப்பட்டதோ...
இதழ் பேசும் 
"வெட்க மொழியில்"
மீண்டும் 
ஆரம்பமானது
இதழ்களின் 
யுத்தம்..



Friday, April 8, 2011

" முத்தத்தின் யுத்தம் " -1


முத்தத்தின் மொழி
மௌனமா...
வெட்கமா...?

மௌனமாய் பார்க்கும் 
விழியாக உன்
இதழ்கள்..
வெட்கம் கொண்ட விழியாய்
என் இதழ்கள்...
இரு விழியும் 
ஸ்நேகமாய் பேசிக் கொள்ளும்
காதல் மொழி..
முத்தம்....


Thursday, April 7, 2011



பார்க்கும் 
இடத்தில் எல்லாம்
நீயே தான் 
தெரிகிறாய்..
கண் மூடிக் கொண்டேன்
கரு விழிக்குள் 
நிறைகிறாய்..
அன்பை கேட்டேன்
உன் உயிரையே தருகிறாய்..
ஆனாலும்
என்னை நீயேதான்
கொல்கிறாயடா...!

Sunday, April 3, 2011

மௌனமாய் பேசுது ... காதல்..

நித்திரையற்ற முன் இரவில்
உன் நினைவுகளால்
கை கோர்க்கிறாய்
நித்திரை ஆட்கொண்ட
பின் இரவில்
என் கனவினில் வந்து
கதவை தட்டுகிறாய்..
ஒரு முறை மட்டுமே
பார்த்த உன்னோடு 
பேசிக்கொண்டே ருக்கிறது
என் காதல் மட்டும் 
மௌனமாய்....