..
காதல் ஒரு மாய வலை..
மனதிற்கு தெரியவில்லை ..சிக்கிக் கொண்ட பின் தான் தெரிந்தது
சிதைத்து விடும் ஆயுளை என்று..!!!
தோழனாக இடமளித்த உன் இதயம்
என் காதலை சொன்னதும்
தொட்டாற்சிணுங்கி இலை போல
மொத்தமாக மூடிக்கொண்டதோ..?
என் கரம் பற்றி ..
என் கரம் பற்றி ..
என் விரல் இடுக்கில் விரல் கோர்த்து
நடை பயின்றாய்...!!
என் உயிரோடு உயிர் கோர்க்க மட்டும்
உன் தலை சாய்தல்கள்.....
எனதன்பு உனதிதயத்தில்
இதம் பதிக்க வில்லையோ..???
மூர்ச்சை உற்றுக் கிடந்த மரங்கள்
வசந்த காலம் வந்ததும்
துளிர் விடும் இலைகள் போல...
நீ வரும் வழி பார்த்ததும்
வசந்தமாகும் என் இதயம்..!!!
வாசலில் உன் கால் பதிந்த
சுவடுகள் கண்டதும்
என் இதழில் புன்னகை..
ஈரப்பசை இன்றி..!!
நிலத்தின் மீது பற்றட்ட மரமாக ...
நிலைக்கொள்ளாமல் ஆடி
நின்றுவிட்டது என் வாழ்க்கை ..!!
ஏன் இந்த நிறுத்தம்..?
உன் வெற்று(ட்டும்)ப் பார்வை கூறிய
வார்த்தைகளினாலா...?
பார்வையின் மொழி பெயர்ப்புகளா அது..???
மின்னல் இல்லை...
மழை இல்லை...
ஆனால் இடி மட்டும்
மெதுவாக நொறுங்கியது என் உள்ளும்...
ஒரு அழகிய உணர்வு...!!
தொட்டதும் ஒட்டிக்கொள்ளும் கெட்டி இரவில்
நேற்று வந்ததும் அதே நிலவு தான்..
இன்று வந்ததும் அதே நிலவு தான்...
ஆனால்...
நேற்றைய நிலவில் கறை என்பது
உன் கன்னத்தின் மச்சமாய் தெரிந்தது..
இன்றைய நிலவில் அது
என் கண்ணீரின் எச்சமாய் உள்ளது..!!!
பொத்தி வைத்த அழுகையும்
பொத்துக்கொண்டு வந்தது..
கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டே
என் உடலின் செந்நீரும் வற்றிப் போனது!
என் கண்மனியே....
உன் வீட்டு விளக்குகளாவது
விளக்குமா உனக்கு..??
நீ இன்றி விட்டு விட்டுத்
துடிக்கிறது என் இதயம்
என்பதை..??
சிந்தி விழப் போகும் என் உயிரினை
கரை சேர்க்கவாவது வா...
என் கண்மணியே...!!!