Friday, February 18, 2011

.....காதல் வலிய(அ)து.....





..
காதல் ஒரு மாய வலை..
மனதிற்கு தெரியவில்லை ..
சிக்கிக் கொண்ட பின் தான் தெரிந்தது
சிதைத்து விடும் ஆயுளை என்று..!!!
தோழனாக இடமளித்த உன் இதயம் 
என் காதலை  சொன்னதும் 
தொட்டாற்சிணுங்கி இலை போல 
மொத்தமாக மூடிக்கொண்டதோ..?





ன் கரம் பற்றி ..
என் விரல் இடுக்கில் விரல் கோர்த்து 
நடை பயின்றாய்...!!
என் உயிரோடு உயிர் கோர்க்க மட்டும் 
மறுதலிப்போ...???




ன் தோள்களில் தடம் பதித்தன 
உன் தலை சாய்தல்கள்.....
எனதன்பு  உனதிதயத்தில் 
இதம் பதிக்க வில்லையோ..???


மூர்ச்சை உற்றுக் கிடந்த மரங்கள் 
வசந்த காலம் வந்ததும் 
துளிர் விடும் இலைகள் போல...
நீ வரும் வழி பார்த்ததும் 
வசந்தமாகும் என் இதயம்..!!!
ன்றோ...
வாசலில் உன் கால் பதிந்த 
சுவடுகள் கண்டதும்
என் இதழில் புன்னகை..
ஈரப்பசை இன்றி..!!

நிலத்தின் மீது பற்றட்ட மரமாக ...
நிலைக்கொள்ளாமல் ஆடி 
நின்றுவிட்டது என் வாழ்க்கை ..!!
ஏன் இந்த நிறுத்தம்..?
ன் வெற்று(ட்டும்)ப் பார்வை கூறிய 
வார்த்தைகளினாலா...?
பார்வையின் மொழி பெயர்ப்புகளா அது..???
மின்னல் இல்லை...
மழை இல்லை...
ஆனால் இடி மட்டும் 
என் இதயத்தில் இறங்கியதோ..??

லனமற்ற நீராக..
நீரில் விட்ட கல்லாக ...      
நீருக்குள் தோன்றும் குமிழியாய் 
மெதுவாக நொறுங்கியது என் உள்ளும்...
ஒரு அழகிய உணர்வு...!!










தொட்டதும் ஒட்டிக்கொள்ளும் கெட்டி இரவில் 
அழகான நிலவு...
நேற்று வந்ததும் அதே நிலவு தான்..
இன்று வந்ததும் அதே நிலவு தான்...
ஆனால்...
நேற்றைய நிலவில் கறை என்பது 
உன் கன்னத்தின் மச்சமாய் தெரிந்தது..
இன்றைய நிலவில் அது 
என் கண்ணீரின் எச்சமாய்  உள்ளது..!!!





பொத்தி வைத்த அழுகையும் 
பொத்துக்கொண்டு வந்தது..
கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டே
என் உடலின் செந்நீரும் வற்றிப் போனது!
என் கண்மனியே....
விட்டு விட்டு எரியும் 
உன் வீட்டு விளக்குகளாவது
விளக்குமா உனக்கு..??
நீ இன்றி விட்டு விட்டுத்  
துடிக்கிறது என் இதயம் 
என்பதை..??
சிந்தி விழப் போகும் என் உயிரினை 
கரை சேர்க்கவாவது வா...
என் கண்மணியே...!!!








Monday, February 7, 2011

மை விழி மயக்கம்..!!!



 தூண்டில் முள்ளாய் உன் விழிகள்....
அதன் காந்த விசை அறியாத என் விழிகள்..!
இரண்டும் சிநேகித்துக்கொண்ட நிமிடம்..
மீட்க முடியாமல் போனது என் இதயம்.!!
உன் பார்வை அம்புகள்
என் மீது தொடுக்கும் போரினை
சற்றே நிறுத்தி வை..
இல்லையேல்....
நான் உறைந்து விடுவேன்
உன் மை விழி மீது உண்டான மயக்கத்தில்..!!!

இதயத்தின் வாசலிலே...!!!


எத்தனை முறை என்னைக் கொன்றாலும் 
உயிர்பித்து விடுகிறேன்..
உன் மீதான என் காதலால்..!!!!
எந்த ஜென்மத்திலும் முடிவுறுவது இல்லை 
காதல் மட்டும்...  இதோ....
நான் எடுத்து விட்டேன்
மறு ஜென்மத்திலும் காதலாக....
ஆனால் நீ.....????
********************************************
என் வாழ்க்கைப்  பக்கங்களை 
புரட்டிப் போட்ட என் இரண்டாம் பாகம் நீ..!!!
எத்தனை முறை என் இதயத்தை 
துடைத்து வைத்தாலும் 
சத்தம் இல்லாமல் வந்து 
சதம் அடித்து விட்டாய்...!!!
*********************************************
மறைந்து போகும் நிமிடங்களைக் கூட 
மறக்காமல் சேர்த்து வைத்து விட்டேன்...
உன் சிறு புன்னகைக்காக ....!!!!
***************************************************************
நீயின்றி செல்லரித்து செயல் இழந்து 
கொண்டிருக்கும் என் உயிரினை...
 உன் பார்வையால்... 
செதுக்கினால் என்ன...???
முற்று பெற்றுக் கொண்டு இருக்கும் என்னில் 
என்றும் முடிவுறா தொடர் புள்ளி நீ..!!!!
****************************************************************
பெண்ணே...
நீ மட்டுமே..
இதயம் இன்றி.. 
என்னுள் குடியேறினாய்.. 
அனுமதி இன்றி..!
காத்து இருக்க வேணுமோ..
நான் மட்டும்..? இதயத்தோடு...??
******************************************************************