Wednesday, May 11, 2011

" அழகான இம்சையடா நீ "


உன் நிழல் படத்தை
சற்று நேரம்
சும்மாதான் பார்த்தேன்
சட்டென 
பற்றிக் கொண்டதடா
ஏதோ ஒன்று...
__________________________

முதலில்
உன் எண்ணங்களை தான்
வாசிக்க தொடங்கினேன்
பின்புதான்
உன்னையே ஸ்வாசிக்க
ஆரம்பித்தேனோ...?
_______________________________


என்னை 
உன் கண்களில்
நனைத்து 
காதல்  செய்கிறாய்...
"சலவைக்காரன் போல 
நீ என்ன காதல் காரனா..?"
________________________________

எப்போதும் 
உன் அருகிலேயே 
என்னை இழுக்கிறாயே..
உன்னையே தொடர
வைக்கிறாயே...
இதுதான்
ஆண் ஈர்ப்பு விசையா...?
___________________________

உன் 
பார்வையால்
இமைக்கவும் மறுக்கின்றன
என் விழிகள்...
விழிகளில் பார்வை
மட்டும் தானே
சாத்தியம்..
உன் விழியில் ஈர்ப்பு விசை 
எப்படியடா...?
______________________________
உன்னை 
நினைக்கும் போதெல்லாம்
தனிமையில் 
சிரிக்கிறேன் நான்..
என்ன 
மந்திரம் செய்தாயடா...?
________________________________







நீ அருகில் இருக்கிறாய்
என்று பேசத் 
தொடங்கி விடுகிறேன்
தனியாக-
சில சமயம்...
என்னை அவ்வளவு
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயடா...
______________________________

உன் 
கைக்குட்டையில்
எப்படித்தான் 
மடித்து 
வைத்தாயோ...?
என் உயிரையும் 
சேர்த்து...
_______________________________
 
உன் பார்வை பட்டதால்
என் கவிதைகளும்
என்னைப் போலவே
உன்னையே
நேசிக்கத் தொடங்கிவிட்டதடா..
__________________________________
என் 
எண்ணக் கருவில்
உதித்த கவிதைகள்
அனைத்தும்
என்னை விட்டு...
காதல் விதைத்த
உன்னையே 
சுற்றுகிறதே...
இது என்னடா
நியாயம்....?!
____________________________
 

Tuesday, May 10, 2011

"பெய்யெனப் பெய்யும் மழை"

இது 
மழைக் காலம்
காதல் 
மழைக் காலம்..
இதில்
நீ
நான்
நம்மோடு 
நம்
  "மழை"


நீயும் நனைகிறாய்
நானும் நனைகிறேன்
நம்மோடு சிலிர்த்து
தானும் நனைகிறது
"மழை"

சாரலோ தூறலோ
தான் மட்டும் இன்றி
சுகமாய் சுமந்து வருகிறது
உன் நினைவுகளையும்
"மழை"


மழை பொழிந்த ஒரு நாளில்..
முழுதும் நனைந்து வந்த
என்னை
துவட்டி விட்டுக்கொண்டே
திட்டினாய்
"பைத்தியக்காரி" என்று..
நானும் கோபமாக 
"போடா காதல்காரா"
என்றேன்...
உடனே
முத்தத்தால் 
துவட்ட ஆரம்பித்தாய்
என்னை...

தேகம் தீண்டும் 
காற்றில் எல்லாம்
உன் வாசம் நுகர்கிறேன்..
சிலிர்த்து பெய்யும்
மழையில் 
நனையும் போதெல்லாம்
சந்தேகம் கொள்கிறேன்..
சில்லென்று என்
தேகம் தொடுவது
மழை துளியா..?
உன்
விரல் நுனியா..?

"அடைமழை"
விடாது பெய்கிறது
உன் காதல்...
நனைந்து நிற்கிறேன்
நான்..