நிழலை
நம்பும் மனம்
நிஜத்தை
மறுக்கிறது..
கண் விழிக்கும்
போதெல்லாம்
கரைந்து
போனதுன் கனவு..
மீண்டும்
இமை மூடிக் கொள்கிறேன்
நிஜத்தை கொல்கிறேன்..
என்
ஆசைகளை
ஆடையாக்கிக்
கொண்ட
என் கனவுகளின்
நாயகன் நீ..
என்
விழி இமைக்கும்
பொழுதினில்
மனதினுள் நுழைந்து
மதி மறக்கச் செய்யும்
குறும்பு நீ..
வம்புகள் செய்தே
என் நேரங்களை
களவாடும்
திருடன் நீ..
எதிர்பார்ப்புகளை
விட்டொழித்தால்
ஏமாற்றம் தடைபடும்
அதீதமான
எதிர்பார்ப்புகள் தான்
மிதமிஞ்சிய ஏமாற்றத்தை
தருகிறதாம்..
ம்ம்ம்ம்..
உண்மை தான்
உன் மீதான என்
எதிர் பார்ப்புகளை
விட்டுவிட்டேனென்று
சொல்லியே
ஏமாற்றிக் கொள்கிறேன்
என்னை நானே
ஒவ்வொரு நொடியிலும்..!