Showing posts with label கனா காலம்.... Show all posts
Showing posts with label கனா காலம்.... Show all posts

Thursday, April 28, 2011

கனா காலம்..

நீண்டு கொண்டே
செல்கிறது என் 

"கனா காலம்"

சின்ன சின்னதாய் 
கெஞ்சல்ஸ்..
சிறுக சிறுக 
கொஞ்சல்ஸ்..
அளவாய் கோபம்..
பார்வையில் மிரட்சி..
பேச்சில் மிரட்டல்...
வசீகரம்.. சிரிப்பு..
மொத்தத்தில் எது
எப்படியோ..?
உன் உணர்வின் மொழி
அனைத்தும் நீண்டு கொண்டே
செல்கிறது.. என்

  "கனா காலத்தில்"
நிதமும் செய்யும் 

ஒவ்வொரு செயலும்


உன்னையே நினைவு படுத்தி


முட்டி மோதி


சண்டையிட்டு


அழுது புலம்பி...


விழுந்து விட்ட முடிச்சுகளை


அவிழ்க்க முடியாது 


அமைதியாகும் மனம்..


மீண்டும் ஒரு வரம்


உன் சந்திப்பு..


நலம் விசாரிக்கிறாய்


அக்கறையோடு


சிறு மாற்றம் தான்..


முன்பெல்லாம்


அதிகாரம், கோபம், கண்டிப்பு,


அரவணைப்பு, காதல், குறை ஏக்க
ம்

எல்லாம் இருக்கும்.
.
இன்று கண்ணீர் தவிர


ஏதுமின்றி நட்பின் போர்வையில்


நினைவு மரத்து தொடர்கிறாய்


உன் விசாரிப்புகளை..!!