Wednesday, April 13, 2011

கைபேசியில் பதிவானது " காதல் "


கை பேசியில் 
பேசியதென்னவோ
நீதான் ...
ஆனால் 
பதிவானதென்னவோ
காதலாகி
போனது...


கை பேசி அழைப்பை
துண்டித்த மறு 
நொடியில்
மீண்டும் அழைப்பு
வருமோ..
என காத்திருக்க
தொடங்கிவிடுகிறது
மனது..

நீ அனுப்பும் குருஞ்செய்திகளோடு
சேர்த்தே அனுப்புகிறாய்
உன் பிரியங்களையும்..

சில நேர கைபேசி
சண்டைகளில்
விட்டுக் கொடுப்பது
நீயாகவே
இருந்திருக்கிறாய்..

அதன் சமாதான
வார்த்தைகளில்
தெரிக்கத் துவங்கிவிடுகிறது
உனதன்பு...

நீ அழைத்து
பேசிய நிமிடங்களையும்
நான் அழைக்காமல் 
விடுத்த நிமிடங்களையும்
பதிவு செய்தே வைத்திருக்கிறது
என் கைபேசி...

இப்போதெல்லாம்
நீ அழைத்து பேசும் 
நிமிடங்களுக்காய்
காத்திருக்கத் துவங்கி விட்டோம்
நானும் எனது 
கை பேசியும்...

2 comments:

isaianban said...

நீ அழைத்து
பேசிய நிமிடங்களையும்
நான் அழைக்காமல்
விடுத்த நிமிடங்களையும்
பதிவு செய்தே வைத்திருக்கிறது
என் கைபேசி...

மிகவும் அருமை சகோ.. வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றி சகோ..