Wednesday, April 13, 2011

" முத்தத்தின் யுத்தம் " - 5


முத்தங்களால் 
கைது செய்து
முத்தங்களால்
 என்னை கொன்ற
மொத்தக் கொலைகாரன் 
நீ


என்றோ
ஒரு இரவில்
வந்த கனவில்
ஓடிக் கொண்டிருந்த
என்னை..
கை இழுத்து
கட்டி அணைத்து..
மற்றவர் 
பார்க்கும் முன்
விலகிச் சென்றாய்..
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
ஈரமாக்கினாய்
இதழ்களை..
இன்னமும் 
காத்திருக்கிறதடா
ஈர இதழ்கள்...
பெற்றதை 
திருப்பிக் கொடுக்க....!!

6 comments:

Ram said...

அட என்னங்க இதே தலைப்புல கவிதை படிச்சு போர் அடிக்குதுங்க.. வேற எழுதுங்க..

MANO நாஞ்சில் மனோ said...

வழக்கம் போல் சுவையுடன்....

Unknown said...

நன்றி கூர்மதியான்... முடிந்தது யுத்தம்...

Unknown said...

நன்றி மனோ சார்...

priyamudanprabu said...

பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
ஈரமாக்கினாய்
இதழ்களை..
இன்னமும்
காத்திருக்கிறதடா
ஈர இதழ்கள்...
பெற்றதை
திருப்பிக் கொடுக்க....!!
/////

mmm கொடுத்து எடுத்து திரும்ப கொடுத்து எடுத்து....இப்படியே முடிவில்லா யுத்தமோ முத்தம் ?!?1

Unknown said...

வணக்கம் பிரபு.. தங்கள் இனிய வருகைக்கு நன்றி..

////கொடுத்து எடுத்து திரும்ப கொடுத்து எடுத்து....இப்படியே முடிவில்லா யுத்தமோ முத்தம் ?!?////

காதல் யுத்தத்தில் முடிவேது...

நித்தமும் முடிவதில்லை
முத்தம் மொத்தமும் காதலில்...