Monday, February 7, 2011

இதயத்தின் வாசலிலே...!!!


எத்தனை முறை என்னைக் கொன்றாலும் 
உயிர்பித்து விடுகிறேன்..
உன் மீதான என் காதலால்..!!!!
எந்த ஜென்மத்திலும் முடிவுறுவது இல்லை 
காதல் மட்டும்...  இதோ....
நான் எடுத்து விட்டேன்
மறு ஜென்மத்திலும் காதலாக....
ஆனால் நீ.....????
********************************************
என் வாழ்க்கைப்  பக்கங்களை 
புரட்டிப் போட்ட என் இரண்டாம் பாகம் நீ..!!!
எத்தனை முறை என் இதயத்தை 
துடைத்து வைத்தாலும் 
சத்தம் இல்லாமல் வந்து 
சதம் அடித்து விட்டாய்...!!!
*********************************************
மறைந்து போகும் நிமிடங்களைக் கூட 
மறக்காமல் சேர்த்து வைத்து விட்டேன்...
உன் சிறு புன்னகைக்காக ....!!!!
***************************************************************
நீயின்றி செல்லரித்து செயல் இழந்து 
கொண்டிருக்கும் என் உயிரினை...
 உன் பார்வையால்... 
செதுக்கினால் என்ன...???
முற்று பெற்றுக் கொண்டு இருக்கும் என்னில் 
என்றும் முடிவுறா தொடர் புள்ளி நீ..!!!!
****************************************************************
பெண்ணே...
நீ மட்டுமே..
இதயம் இன்றி.. 
என்னுள் குடியேறினாய்.. 
அனுமதி இன்றி..!
காத்து இருக்க வேணுமோ..
நான் மட்டும்..? இதயத்தோடு...??
******************************************************************

1 comment:

balasankar said...

நான் மட்டும்..? காத்து இருக்க வேணுமோ இதயத்தோடு...?? sowmya