முத்தங்களால்
கைது செய்து
முத்தங்களால்
என்னை கொன்ற
மொத்தக் கொலைகாரன்
நீ
என்றோ
ஒரு இரவில்
வந்த கனவில்
ஓடிக் கொண்டிருந்த
என்னை..
கை இழுத்து
கட்டி அணைத்து..
மற்றவர்
பார்க்கும் முன்
விலகிச் சென்றாய்..
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
ஈரமாக்கினாய்
இதழ்களை..
இன்னமும்
காத்திருக்கிறதடா
ஈர இதழ்கள்...
பெற்றதை
திருப்பிக் கொடுக்க....!!






