உடைந்த உங்கள் நெஞ்சகத்திற்கு
அமைதியை கடத்தும் விதமாக
ஆதுரமாக இதழ் பதிக்கிறேன்.
அப்போது
முன்பைவிடவும்
அதிக வலியில் தவிக்கின்ற நீங்கள்
ஒட்டுமொத்த தவிப்பையும்
எனக்குள் கடத்திடவிட முனைந்த கணத்தில்
மலரைப்போல ,உதிரத்துவங்கிய காலம்
முழுவதுமாக எனை கொன்றுவிட்டிருந்தது.
அமைதியை கடத்தும் விதமாக
ஆதுரமாக இதழ் பதிக்கிறேன்.
அப்போது
முன்பைவிடவும்
அதிக வலியில் தவிக்கின்ற நீங்கள்
ஒட்டுமொத்த தவிப்பையும்
எனக்குள் கடத்திடவிட முனைந்த கணத்தில்
மலரைப்போல ,உதிரத்துவங்கிய காலம்
முழுவதுமாக எனை கொன்றுவிட்டிருந்தது.
No comments:
Post a Comment