Friday, December 24, 2010

புரியவில்லையா ??


தேடி தேடி அலைந்து கண்டுகொண்டேன் ...
உன் முகவரியை ...
நீதான் என் முதல் வரி என்றேன் நான்...

தட்டுங்கள் திறக்கப்படும்...
கேளுங்கள் கொடுக்கப்படும்...
என்று வாசகம் எழுதி வைத்தாய்....

ஆனால்...
நான் தட்டினாலும் உன் மனதை திறக்க மறுக்கிறாய் ....
நான் கேட்டாலும் உன் இதயத்தை கொடுக்க மறுக்கிறாய்.
..
உயிரினை நாணாக்கி..
என் உணர்வுகளால் அம்பு எய்தினேன் ...
.
அன்று....
உன் நீள் விழி பார்வையில் விழுந்த நான்......
மீளவே இல்லை.
.
இன்றுவரை....
நான் கவிதை வாசித்தேன் அன்று....
கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி என்றாய் நீ.....
என் கவிதையே நீதான் என்றேன் நான்...

கள்வனே...
இன்னுமா புரியவில்லை... உனக்கு..!!!!!!!!
என் காதலன் நீதான் என்று..

1 comment:

balasankar said...

இன்னுமா புரியவில்லை... உனக்கு/ SOWMYA
Super lines