Wednesday, September 14, 2011

நீ என் " மழையானவன் .. !"



உன்
மின்னல் சிரிப்பில்
நெட்டித் தள்ளி
என்னுயிர்
சிதறச் செய்யும்
என் ப்ரிய
மழை துளி நீ..

நகர்ந்து செல்லும்
கார்மேகத்தின்
சாரலாகி
பூந்தூறலாகி
பெருமழையாகிறாய்
உன் காதலில்..

அடை மழையாய் 
சில நேரம்..
ஆரவாரமற்று 
சில நேரம்..
ஆர்பாட்டங்களோடு
பல நேரமுமென
கனமழையாகிறாய் 
என் இதயம் 
நனைத்து 
வாசம் வீசுகிறாய்..

மழை தேடி
தவித்திருக்கும்
நிலம் போல
உனை தேடி 
காத்திருக்கிறேன்
பல நேரங்களில்
நான்..

மழை நின்ற பின்பான
மண் வாசம்..
நாசி துளைத்து
உள் நுழைந்து
இதயம் வருடி
மூளையை எட்டும்..!

முதுகுத் தண்டில்
மின்னல் வெட்டி..
மின்சாரம் பாய்ந்து
மென் இதயம் கிழித்து
குருதி புசித்து
என் உள்ளம் எட்டும்
உன் காதல் வாசம்..!

இப்போதாவது
புரிந்து கொள்.. 

நீ என் 
" மழையானவன் "


2 comments:

மாணவன் said...

very nice... :)

பாலா said...

உங்கள் தளத்திற்கு இப்பொதுதான் முதல் முறையாக வருகிறேன். நமக்கு கவிதை எல்லாம் வராதுங்க... பேசாம உங்க தளத்துல இருந்து காப்பி அடிச்சிட வேண்டியதுதான்.