Thursday, August 18, 2011

" நிறைய நீயும் .. கொஞ்சம் நானும்... " 1




நீ
பார்க்கும் 
ஒவ்வொரு முறையும்
புதிதாய் பிறக்கிறேன் 
நான்..

ஒரே தவறுதான்
விரும்பியே செய்கிறேன்..
நீ 
திரும்பித் திரும்பிப்
பார்க்கையில்
உன்னை 
விரும்பி விரும்பியே
களவாடுகிறது 
என் கண்கள்...

ஒரு முறை 
உன் விழியினை சந்திக்க 
ஓராயிரம் முறை 
யுத்தம் செய்கின்றன
என் இமைகள்..

உன்னோடு 
ஒரு வார்த்தை பேச
நூறு முறை
ஒத்திகை பார்க்கின்றன
என் வார்த்தைகள்..

போகிற போக்கில்
சிந்தி விட்டுச் செல்கிறாய் 
மெல்லியதாய் 
ஒரு புன்னகை...
அது 
என் இதயம் வரை
ஸ்பரிசித்து விட்டு
செல்கிறது...

இப்படி
" நிறைய நீயும்
கொஞ்சம் நானுமாக 
எனக்குள்ளே 
காதல்.. "

1 comment:

Siva said...

மிகவும் அருமையான கவிதை