Tuesday, March 1, 2011

காதலாய் ஒரு தேவதை....!





எட்டாத் தொலைவில் நீ..
உன் இதயத்தை
எட்டும் தொலைவு தான்
என் காதல்..!!
___________________________


இடைவெளி அதிகம் தான்..
உனக்கும் எனக்கும்...
இடையில் வரும் ஒளி கூட
அதிகம் இல்லை
உன் மீதான் என் காதலுக்கு...!!
_______________________________


உரக்கமற்ற இரவுகளில்
நெருங்கும் உன் நினைவுகள்
நெருக்காமல் போவதில்லை
என் இதயத்தை....!!
________________________________


நிதமும் தான் யுத்தம் செய்கிறேன்
உன்னுடனும் என் காதலுடனும்....
தினமும் ஒரு முத்தமாவது
கொடுத்து விட்டுப் போயேன்..!!
___________________________________


இரவின் மடியில் துயிலும்
அழகிய தேவதை நீ..
உன் ஜன்னலில்
நட்சத்திரங்கள் மாநாடா??
எனக்குள் அல்லவா நடக்கிறது
பட்டிமன்றம்...!!!
___________________________________


என் வீட்டு ஆளுயரக் கண்ணடியையும்
கொஞ்சம் பார்த்து விட்டுப் போயேன்
என்னை பைத்தியமாக நினைக்கும் அதுவும்
உன் அழகில் கொஞ்சம் மயங்கிப் போகட்டும்..!!
_________________________________________


நிதமும் தானே
யுத்தம் செய்கிறேன்
என் காதலோடு...
தினமும் ஒரு முத்தமாவது
தந்து விட்டுப் போயேன்..!!
______________________________


"நொடிக்கொரு முறை
உன் மீது காதல்"
என்றேன்...
"நொடிக்கொரு முறை தானா...?
நொடிகள் தோறும் இல்லையா...?"
கன்னத்தில் கிள்ளி
கண்ணால் சிரிக்கிறாயே..!!
____________________________________

13 comments:

ரசிகன்! said...

உரக்கமற்ற இரவுகளில்
நெருங்கும் உன் நினைவுகள்
நெருக்காமல் போவதில்லை
என் இதயத்தை....!!
//

இது ரொம்ப நல்லா இருக்கு! :-)

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

எட்டும் அசத்தல்...

// "நொடிக்கொரு முறை
உன் மீது காதல்"
என்றேன்...
"நொடிக்கொரு முறை தானா...?
நொடிகள் தோறும் இல்லையா...?"
கன்னத்தில் கிள்ளி
கண்ணால் சிரிக்கிறாயே..!! //

உண்மையான உள்ளத்தின் ஏக்கமும்
உண்மையான் அன்பின் வெளிப்பாடும்

// நிதமும் தானே
யுத்தம் செய்கிறேன்
என் காதலோடு...
தினமும் ஒரு முத்தமாவது
தந்து விட்டுப் போயேன்..!! //

வெற்றியோ தோல்வியோ பரிசாய்
முத்தபரிமாற்றம் மட்டும் நிகழட்டும்... என்றோ?

யுத்ததின் பரிசு காதல்....

‎// என் வீட்டு ஆளுயரக் கண்ணடியையும்
கொஞ்சம் பார்த்து விட்டுப் போயேன்
என்னை பைத்தியமாக நினைக்கும் அதுவும்
உன் அழகில் கொஞ்சம் மயங்கிப் போகட்டும்..!!//

என் வீட்டு கண்ணாடியும் பைத்தியமாகிக்கொண்டு உன்னால்....

பைத்தியம் என்று சொன்ன கண்ணாடிக்கு தண்டனையோ?

‎// இரவின் மடியில் துயிலும்
அழகிய தேவதை நீ..
உன் ஜன்னலில்
நட்சத்திரங்கள் மாநாடா??
எனக்குள் அல்லவா நடக்கிறது
பட்டிமன்றம்...!!! //

நீதுயில்கொள்ளும் நேரத்தில் மெல்ல
கூந்தலும் அசைவதால் என்னவோ?
இரவுகாற்றும் அதிகாலை காற்றும் இதமாக?

பட்டிமன்றம்..... இன்னிசையாக மாறி...

‎// உறக்கமற்ற இரவுகளில்
நெருங்கும் உன் நினைவுகள்
நெருக்காமல் போவதில்லை
என் இதயத்தை....!! //

உறக்கமற்ற இரவாக
மாற்றிய உன்நினைவுகள்
நொருக்காமல் போவதில்லை
என் இதயத்தை....

இதயங்கள் சிதறிக்கொண்டு...

‎// இடைவெளி அதிகம் தான்..
உனக்கும் எனக்கும்...
இடையில் வரும் ஒளி கூட
அதிகம் இல்லை
உன் மீதான் என் காதலுக்கு...!!//

ஒளிசிந்தும் சூரியன்கூட
பிரமித்து போகிறான்
உன்மீது நான்கொண்டிருக்கும்
காதலை கண்டுவியந்து

காதல் - இடையில்லாத பெண்ணோ?

/‎/ எட்டாத் தொலைவில் நீ..
உன் இதயத்தை
எட்டும் தொலைவு தான்
என் காதல்..!! //

காணாமல் இருந்தாலும்
அன்பினை அளித்துக்கொண்டு

சொல்லாமல் போனாலும்
சுகத்தினை அளித்துக்கொண்டு

காதலின் வலிமை இதுதானோ?

Anonymous said...

Eniya kathal vatikal. vaalthukal.

logu.. said...

\\உரக்கமற்ற இரவுகளில்
நெருங்கும் உன் நினைவுகள்
நெருக்காமல் போவதில்லை
என் இதயத்தை....!!
_________________________\\

கவித..கவித.. பட்டைய கெளப்புதுங்கோவ்வ்..

Unknown said...

@ ரசிகன்....நன்றி சதீஷ்..

Unknown said...

@ தஞ்சை.வாசன்....//வெற்றியோ தோல்வியோ பரிசாய்
முத்தபரிமாற்றம் மட்டும் நிகழட்டும்... என்றோ?
யுத்ததின் பரிசு காதல்.////

யுத்ததின் மொத்தப் பரிசப்பா... அது..

Unknown said...

//என் வீட்டு கண்ணாடியும் பைத்தியமாகிக்கொண்டு உன்னால்....
பைத்தியம் என்று சொன்ன கண்ணாடிக்கு தண்டனையோ?//

அவளி அழகை பார்த்து அதுவும் அழகு படுத்திக் கொள்ளதான்...!!

///காதல் - இடையில்லாத பெண்ணோ?// காதலிக்க ஆரம்பித்தாலே ஆணோ பெண்ணோ ... அவர்களுக்கு இடையில் எல்லாமும் அற்று தான் போகின்றன்..!!

///காணாமல் இருந்தாலும்
அன்பினை அளித்துக்கொண்டு///
சொல்லாமல் போனாலும்
சுகத்தினை அளித்துக்கொண்டு
காதலின் வலிமை இதுதானோ?///

அது தொலைவில் இருந்தாலும் சொல்லாத் சோகமும் சுகமாகவே இருக்கும்.. அதை காதலின் மௌனங்கள் சொல்லிடுமே..!!

கருத்துரக்கு மிக்க நன்றி ஸ்ரீ....!!

Unknown said...

@ logu..\\உரக்கமற்ற இரவுகளில்
நெருங்கும் உன் நினைவுகள்
நெருக்காமல் போவதில்லை
என் இதயத்தை....!!
_________________________\\

கவித..கவித.. பட்டைய கெளப்புதுங்கோவ்வ்.////

மிக்க நன்றி நண்பா..

Unknown said...

@ kovaikkavi.... மிக்க நன்றிங்க..

Unknown said...

அழகான காதல் வரிகள்.. அருமை

Unknown said...

நன்றி.... சிநேகிதி....!!

ஜெய்லானி said...

காதல் கவிதைன்னு சொன்னா இதுக்கு பேர்தான் காதல் கவிதை ..ஒவ்வொன்னும் உருக வைக்கிறது :-))

Unknown said...

@ஜெய்லானி...நன்றி நண்பரே...
புதுசா வந்து இருக்கீங்க எங்க வீட்டுக்கு... வருக வருக...