Showing posts with label மழையுதிர் காலம். Show all posts
Showing posts with label மழையுதிர் காலம். Show all posts

Friday, September 20, 2013

மழையானவள்.. உன் மனதாள்பவள்.. 2



நாமிருவம்
ஒரு குடைக்குள் பயணித்தோம்

நனைந்துக் கொண்டிருந்தது
ஓராயிரம்
மழைத் துளி..


உன்னையும் என்னையும்

சுற்றி வளைத்து
வானவில்லானது
மழை..


நீயில்லாதொரு

பயணத்தில்
வழிப்போக்கனாய்
உடன் வந்தது
மழை..

Friday, September 13, 2013

மழையானவள்.. உன் மனதாள்பவள்.. 1






மனம் நனையச் செய்வதில்
ஒன்றுதான் 
நீயும் 
மழையும்..




நினக்கும் போதெல்லாம்

வருவதே இல்லை
நீயும் 
மழையும்...




பருவ மழை தப்பிப் போனதாம்

உன் வருகையைப் போலவே...





அடைமழைக்கு பிறகான

அமைதி
உன் வருகைக்கு பிறகான
என் கோபம்..