Showing posts with label சிந்தித்தேனே கனாவிலே..... Show all posts
Showing posts with label சிந்தித்தேனே கனாவிலே..... Show all posts

Tuesday, September 20, 2011

" கருணைக் கொலை.. "








சேர்த்திருப்பாயா.. நீ ??
சேர வேண்டிய 
அனைத்தையும்
சேர்த்திருப்பாயா...??

கடவுளிடம் 
கருனை கேள்
நீ இதை செய்
அதற்காக 
நான் அதை 
ஈடு செய்கிறேன் - என்று
வியாபாரம் செய்யாதே..

கடன் கொண்டு
சுமை ஏற்காதே..
முற்பிறவியின்
தீரா சுமைக்காக தானே
இம் மனிதப் பிறவி..

இப்பிறவியிலும்
தொடரும் 
உன்னை
இறைவனாலவது
செய்ய முடியுமா

ஒரு
"கருணைக் கொலை..!"



Monday, September 19, 2011

" கொள் அல்லது கொல் "





எனை ஆட்கொண்ட இறைவா
உன் சம்மதத்தில் தானே
அனைத்தும் ..

மடியும் உயிரும்
உருகும் மெழுகாகி
சிந்தை சிதைந்து நிற்கிறது
நிந்தனை செய்யும் எண்ணங்களால்..

மன்னிக்கவியலா மனிதர்கள்
நிறைந்த இவ்வுலகில்
வேண்டாமெனக்கு 
பிறவியொன்றொன்று..

தயை செய்து - இப்போதே
என்னை கொள்
அல்லது கொல்..


Sunday, March 13, 2011

ஜப்பான் நகர் (அ)வலம்



எங்கு நோக்கிலும் நீலம்....
கீழும் நீலம்
மேலும் நீலம்
எட்டாத் தொலைவு தன்னில்
பார்வையின் சிறு வட்டத்திற்குள்
கவிகிறது நீலவானம்...!

ததும்பும் நீரில்
தடம் மாறாமல்
உருண்டு நிற்கின்றன
மனித உடல்களும், உடமைகளும்..!

தொகுதி தொகுதியாய் கார்களும்
கரைந்து போன மண்ணாய் கட்டிடங்களும்..
ஒளி வெள்ளத்தில் மிதந்த நகரம்
இன்று நீரில் மிதந்து
இருளோடு கவிகிறது..!

பசிபிக் பெருங்கடலே - நீ
அலை அலையாய் புன்னகைத்தாயே...!
இதற்குத் தானா..??
சில வருட இடைவெளிக்குப் பின்னான
இரண்டாம் பாகமோ....?

உன்னுள் சிக்கியவர்கள்
மூழ்கினார்கள்...
வெளிவந்தார்கள்..
மறைந்தார்கள்...
நீர் குடித்து நிலை மறந்தார்கள்..
மிதந்தார்கள் சடலங்களாய்..!

இரக்கமின்றி களவாடி விட்டாய்
இறுகி நிற்கிறோம் நாங்கள்...

இரு பகல்
இரு இரவு முடிந்து விட்டது..

தடம் மாறி வந்த தடயத்தால்
பார்வைகளால் மட்டுமே
ஒருவரை ஒருவர்
நலம் விசாரிக்கும் ஊமை வாழ்க்கை
அரங்கேற்றமாகிறது அங்கு...!!

Tuesday, March 8, 2011

சிந்தனை செய் மனமே..!!

சில இம்சைகளோடு ..

பல கழிவுகளை பெற்றுக் கொண்டு

பொறுமையோடு நிற்கிறது

ஒரு குப்பைத்தொட்டி

தனக்குள் பேசிக்கொண்டே...

"வேண்டாத கழிவுகளுக்கு மட்டுமா..??

நீ வேண்டாம் என்று விசுறும்

உயிர் உள்ள பிஞ்சுகளுக்கும்..

நிரம்பிய குப்பையே மெத்தையாய்..

தாலாட்டு பாடாத தாயாக நான்..!!

என்னை கடக்கும் போது

முகம் சுழிக்கும் நீ..

குப்பையோ குழந்தையோ...

நீ வீசும் போது முகம் சுழிக்கவா நான்..??

மனிதா....

என்னை விட நீ எவ்விததில் உயர்த்தி..?"

Monday, January 17, 2011

FRIENDS..... FOR EVER....

F ree from all formalities.....

R ight to say anything......

I nterminable affection.....

E ither good or bad......

N o sorry no thanks......

D ear to dearest one...!!!!!!!!!!!!!