வெய்யில் உலரத் துவங்கிய பொழுதில்
வானம் தன்னை முழுமையாக
வெறுமையிடம் ஒப்படைத்திருந்தது.
அதன் விரலொன்று
வெகு லாகவமாக காலத்தை கிழித்துக் கொண்டிருக்க
உன்னை நிறைத்து
தளும்பிக் கொண்டிருக்கும் மேகத்திற்குள்ளிருந்து
சடசடத்துப் பெய்கிறாய்
வழிந்தோடும் உன்னை எடுத்து வாசம் கொள்ளும் காற்றின்
திசையெங்கிலும் விரவத்தொடங்குகிறாய்.
இப்போது
இருளடர்ந்த மரத்தினை சம்பவிக்கும் காற்று இலையொன்றைத் துளையிட்டுக் கொண்டிருக்கிறது..
- சௌம்யா...
2 comments:
நல்லாருக்கு..!
கவிதை அருமை...
Post a Comment