Friday, September 13, 2013

மழையானவள்.. உன் மனதாள்பவள்.. 1






மனம் நனையச் செய்வதில்
ஒன்றுதான் 
நீயும் 
மழையும்..




நினக்கும் போதெல்லாம்

வருவதே இல்லை
நீயும் 
மழையும்...




பருவ மழை தப்பிப் போனதாம்

உன் வருகையைப் போலவே...





அடைமழைக்கு பிறகான

அமைதி
உன் வருகைக்கு பிறகான
என் கோபம்..