Wednesday, May 11, 2011

" அழகான இம்சையடா நீ "


உன் நிழல் படத்தை
சற்று நேரம்
சும்மாதான் பார்த்தேன்
சட்டென 
பற்றிக் கொண்டதடா
ஏதோ ஒன்று...
__________________________

முதலில்
உன் எண்ணங்களை தான்
வாசிக்க தொடங்கினேன்
பின்புதான்
உன்னையே ஸ்வாசிக்க
ஆரம்பித்தேனோ...?
_______________________________


என்னை 
உன் கண்களில்
நனைத்து 
காதல்  செய்கிறாய்...
"சலவைக்காரன் போல 
நீ என்ன காதல் காரனா..?"
________________________________

எப்போதும் 
உன் அருகிலேயே 
என்னை இழுக்கிறாயே..
உன்னையே தொடர
வைக்கிறாயே...
இதுதான்
ஆண் ஈர்ப்பு விசையா...?
___________________________

உன் 
பார்வையால்
இமைக்கவும் மறுக்கின்றன
என் விழிகள்...
விழிகளில் பார்வை
மட்டும் தானே
சாத்தியம்..
உன் விழியில் ஈர்ப்பு விசை 
எப்படியடா...?
______________________________
உன்னை 
நினைக்கும் போதெல்லாம்
தனிமையில் 
சிரிக்கிறேன் நான்..
என்ன 
மந்திரம் செய்தாயடா...?
________________________________







நீ அருகில் இருக்கிறாய்
என்று பேசத் 
தொடங்கி விடுகிறேன்
தனியாக-
சில சமயம்...
என்னை அவ்வளவு
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயடா...
______________________________

உன் 
கைக்குட்டையில்
எப்படித்தான் 
மடித்து 
வைத்தாயோ...?
என் உயிரையும் 
சேர்த்து...
_______________________________
 
உன் பார்வை பட்டதால்
என் கவிதைகளும்
என்னைப் போலவே
உன்னையே
நேசிக்கத் தொடங்கிவிட்டதடா..
__________________________________
என் 
எண்ணக் கருவில்
உதித்த கவிதைகள்
அனைத்தும்
என்னை விட்டு...
காதல் விதைத்த
உன்னையே 
சுற்றுகிறதே...
இது என்னடா
நியாயம்....?!
____________________________
 

8 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர்...

rajamelaiyur said...

Wow . . What a poem . . Very super . .

rajamelaiyur said...

Kavithai meka arumai . .

balasankar said...

super

balasankar said...

superrrrrrrrrrrrrrrrrrrrrrr

குணசேகரன்... said...

கலக்கறீங்க... keep it up.
http://zenguna.blogspot.com

Ram said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_04.html

Shiva sky said...

அப்பப்ப......நட்பின் பக்கமும் செல்கிறதே.
உங்களின் பேனாமுனை....

அந்த நட்புதான் இங்கு காதலானதோ...?