Tuesday, May 10, 2011

"பெய்யெனப் பெய்யும் மழை"

இது 
மழைக் காலம்
காதல் 
மழைக் காலம்..
இதில்
நீ
நான்
நம்மோடு 
நம்
  "மழை"


நீயும் நனைகிறாய்
நானும் நனைகிறேன்
நம்மோடு சிலிர்த்து
தானும் நனைகிறது
"மழை"

சாரலோ தூறலோ
தான் மட்டும் இன்றி
சுகமாய் சுமந்து வருகிறது
உன் நினைவுகளையும்
"மழை"


மழை பொழிந்த ஒரு நாளில்..
முழுதும் நனைந்து வந்த
என்னை
துவட்டி விட்டுக்கொண்டே
திட்டினாய்
"பைத்தியக்காரி" என்று..
நானும் கோபமாக 
"போடா காதல்காரா"
என்றேன்...
உடனே
முத்தத்தால் 
துவட்ட ஆரம்பித்தாய்
என்னை...

தேகம் தீண்டும் 
காற்றில் எல்லாம்
உன் வாசம் நுகர்கிறேன்..
சிலிர்த்து பெய்யும்
மழையில் 
நனையும் போதெல்லாம்
சந்தேகம் கொள்கிறேன்..
சில்லென்று என்
தேகம் தொடுவது
மழை துளியா..?
உன்
விரல் நுனியா..?

"அடைமழை"
விடாது பெய்கிறது
உன் காதல்...
நனைந்து நிற்கிறேன்
நான்..

3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அடடடடா அருமை அருமை...அசத்தல் அசத்தல்....

MANO நாஞ்சில் மனோ said...

அடடடடா அருமை அருமை...அசத்தல் அசத்தல்....

Shiva sky said...

ஆசைகள் அதிகம்.....உனக்கு தோழி...