Friday, December 24, 2010

வாழ்க்கை வாழ்வதற்கே...!!!!

அன்று...
என் எதிர் சீட்டுப் பயணி நீ.....
என் வரையில் அந்நியமாய்.....!
இன்று....
எனதருகில் ... என் எதிர்காலமாய் நீ...
என் உயிர் வரையில் காவியமாய் .....!
நாளை...
வேண்டாம்..
நாம் இன்றிலேயே இருப்போம்..
நாளை என்பதை யோசியாமல் ...!
வாழ்க்கை வாழ்வதற்குத்தான்
யோசிப்பதற்கு அல்ல...!!!!!!

புரியவில்லையா ??


தேடி தேடி அலைந்து கண்டுகொண்டேன் ...
உன் முகவரியை ...
நீதான் என் முதல் வரி என்றேன் நான்...

தட்டுங்கள் திறக்கப்படும்...
கேளுங்கள் கொடுக்கப்படும்...
என்று வாசகம் எழுதி வைத்தாய்....

ஆனால்...
நான் தட்டினாலும் உன் மனதை திறக்க மறுக்கிறாய் ....
நான் கேட்டாலும் உன் இதயத்தை கொடுக்க மறுக்கிறாய்.
..
உயிரினை நாணாக்கி..
என் உணர்வுகளால் அம்பு எய்தினேன் ...
.
அன்று....
உன் நீள் விழி பார்வையில் விழுந்த நான்......
மீளவே இல்லை.
.
இன்றுவரை....
நான் கவிதை வாசித்தேன் அன்று....
கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி என்றாய் நீ.....
என் கவிதையே நீதான் என்றேன் நான்...

கள்வனே...
இன்னுமா புரியவில்லை... உனக்கு..!!!!!!!!
என் காதலன் நீதான் என்று..

Thursday, December 23, 2010

சொல்லிவிடு....!!!

தகிக்கின்றது என் இதயம்..
செந்தணல் போல ...
உன் கனல் வீசும் பார்வை அம்புகளால்...!!!
மௌனத்தை தொலைத்து விடு...
இல்லையேல்....
... உறைந்து விடும் என் இதயம்..
பனிக்கட்டியாய் ...!!!!!
சிறு வார்த்தை பேசி விடு உயிர்ப்பித்து விடும் ...
நீயே சொல் நான் ..
வாழ்வாத????? வீழ்வதா?????.....