Tuesday, June 21, 2016

உனக்கான கவிதைகள் இன்னமும் மிச்சமிருக்கின்றது.
மொழியின் லாகவத்தை
சொற்களில் திணித்து அடைத்து
இறுக முடிச்சிட்டு
பின்
வானம் நோக்கி விசுறுவேன்.
கருண்டு
திரண்டு
மேகமாகி நிற்கும் அவை
என்றேனும் உன்னை குறிவைத்துப் பெய்யும்.
அதை நேசம் என்பேன் நான்
மழை என்பாய் நீ.

- சௌம்யா.
உடைந்த உங்கள் நெஞ்சகத்திற்கு
அமைதியை கடத்தும் விதமாக
ஆதுரமாக இதழ் பதிக்கிறேன்.
அப்போது
முன்பைவிடவும்

அதிக வலியில் தவிக்கின்ற நீங்கள்
ஒட்டுமொத்த தவிப்பையும்
எனக்குள் கடத்திடவிட முனைந்த கணத்தில்
மலரைப்போல ,உதிரத்துவங்கிய காலம்
முழுவதுமாக எனை கொன்றுவிட்டிருந்தது.