Friday, September 20, 2013

காற்று துளையிடும் இலை.






வெய்யில் உலரத் துவங்கிய பொழுதில்
வானம் தன்னை முழுமையாக 
வெறுமையிடம் ஒப்படைத்திருந்தது.
அதன் விரலொன்று 
வெகு லாகவமாக காலத்தை கிழித்துக் கொண்டிருக்க
உன்னை நிறைத்து 
தளும்பிக் கொண்டிருக்கும் மேகத்திற்குள்ளிருந்து 
சடசடத்துப் பெய்கிறாய்
வழிந்தோடும் உன்னை எடுத்து வாசம் கொள்ளும் காற்றின்
திசையெங்கிலும் விரவத்தொடங்குகிறாய்.
இப்போது
இருளடர்ந்த மரத்தினை சம்பவிக்கும் காற்று இலையொன்றைத் துளையிட்டுக் கொண்டிருக்கிறது.. 

- சௌம்யா...

மழையானவள்.. உன் மனதாள்பவள்.. 2



நாமிருவம்
ஒரு குடைக்குள் பயணித்தோம்

நனைந்துக் கொண்டிருந்தது
ஓராயிரம்
மழைத் துளி..


உன்னையும் என்னையும்

சுற்றி வளைத்து
வானவில்லானது
மழை..


நீயில்லாதொரு

பயணத்தில்
வழிப்போக்கனாய்
உடன் வந்தது
மழை..

Friday, September 13, 2013

மழையானவள்.. உன் மனதாள்பவள்.. 1






மனம் நனையச் செய்வதில்
ஒன்றுதான் 
நீயும் 
மழையும்..




நினக்கும் போதெல்லாம்

வருவதே இல்லை
நீயும் 
மழையும்...




பருவ மழை தப்பிப் போனதாம்

உன் வருகையைப் போலவே...





அடைமழைக்கு பிறகான

அமைதி
உன் வருகைக்கு பிறகான
என் கோபம்..