Thursday, March 24, 2011

எப்படி சொல்வேன்..???


எப்படி சொல்வேன்
உனக்கு எப்படி சொல்வேன்
என் அன்பை..

என் மௌனத்திலா..?
என் கோபத்திலா..?
என் கண்ணீரிலா...?
உன்னை பார்த்த உடன்
பூத்துவிடத் துடிக்கும்
என் புன்னகையிலா..?

என் விழிகள் முன்மொழியாத
என் அன்பை..
என் கவிதையின் வரிகளில்
வழிமொழியவா..??

எப்படி சொல்வேன்....
என் அன்பை...??

******************************
இடைவெளியற்ற உன் நினைவால்
இடையில் என் வரிகளும் விட்டுப்போகிறதடா..

என் கவிதைகளை தானே
வாசிக்கச் சொன்னேன்...

நீ
ஏன் மௌனித்துக் கொள்கிறாய்..??
ஏன் மௌனித்துக் கொல்கிறாய்...???

Sunday, March 13, 2011

ஜப்பான் நகர் (அ)வலம்



எங்கு நோக்கிலும் நீலம்....
கீழும் நீலம்
மேலும் நீலம்
எட்டாத் தொலைவு தன்னில்
பார்வையின் சிறு வட்டத்திற்குள்
கவிகிறது நீலவானம்...!

ததும்பும் நீரில்
தடம் மாறாமல்
உருண்டு நிற்கின்றன
மனித உடல்களும், உடமைகளும்..!

தொகுதி தொகுதியாய் கார்களும்
கரைந்து போன மண்ணாய் கட்டிடங்களும்..
ஒளி வெள்ளத்தில் மிதந்த நகரம்
இன்று நீரில் மிதந்து
இருளோடு கவிகிறது..!

பசிபிக் பெருங்கடலே - நீ
அலை அலையாய் புன்னகைத்தாயே...!
இதற்குத் தானா..??
சில வருட இடைவெளிக்குப் பின்னான
இரண்டாம் பாகமோ....?

உன்னுள் சிக்கியவர்கள்
மூழ்கினார்கள்...
வெளிவந்தார்கள்..
மறைந்தார்கள்...
நீர் குடித்து நிலை மறந்தார்கள்..
மிதந்தார்கள் சடலங்களாய்..!

இரக்கமின்றி களவாடி விட்டாய்
இறுகி நிற்கிறோம் நாங்கள்...

இரு பகல்
இரு இரவு முடிந்து விட்டது..

தடம் மாறி வந்த தடயத்தால்
பார்வைகளால் மட்டுமே
ஒருவரை ஒருவர்
நலம் விசாரிக்கும் ஊமை வாழ்க்கை
அரங்கேற்றமாகிறது அங்கு...!!

Tuesday, March 8, 2011

சிந்தனை செய் மனமே..!!

சில இம்சைகளோடு ..

பல கழிவுகளை பெற்றுக் கொண்டு

பொறுமையோடு நிற்கிறது

ஒரு குப்பைத்தொட்டி

தனக்குள் பேசிக்கொண்டே...

"வேண்டாத கழிவுகளுக்கு மட்டுமா..??

நீ வேண்டாம் என்று விசுறும்

உயிர் உள்ள பிஞ்சுகளுக்கும்..

நிரம்பிய குப்பையே மெத்தையாய்..

தாலாட்டு பாடாத தாயாக நான்..!!

என்னை கடக்கும் போது

முகம் சுழிக்கும் நீ..

குப்பையோ குழந்தையோ...

நீ வீசும் போது முகம் சுழிக்கவா நான்..??

மனிதா....

என்னை விட நீ எவ்விததில் உயர்த்தி..?"

Tuesday, March 1, 2011

காதலாய் ஒரு தேவதை....!





எட்டாத் தொலைவில் நீ..
உன் இதயத்தை
எட்டும் தொலைவு தான்
என் காதல்..!!
___________________________


இடைவெளி அதிகம் தான்..
உனக்கும் எனக்கும்...
இடையில் வரும் ஒளி கூட
அதிகம் இல்லை
உன் மீதான் என் காதலுக்கு...!!
_______________________________


உரக்கமற்ற இரவுகளில்
நெருங்கும் உன் நினைவுகள்
நெருக்காமல் போவதில்லை
என் இதயத்தை....!!
________________________________


நிதமும் தான் யுத்தம் செய்கிறேன்
உன்னுடனும் என் காதலுடனும்....
தினமும் ஒரு முத்தமாவது
கொடுத்து விட்டுப் போயேன்..!!
___________________________________


இரவின் மடியில் துயிலும்
அழகிய தேவதை நீ..
உன் ஜன்னலில்
நட்சத்திரங்கள் மாநாடா??
எனக்குள் அல்லவா நடக்கிறது
பட்டிமன்றம்...!!!
___________________________________


என் வீட்டு ஆளுயரக் கண்ணடியையும்
கொஞ்சம் பார்த்து விட்டுப் போயேன்
என்னை பைத்தியமாக நினைக்கும் அதுவும்
உன் அழகில் கொஞ்சம் மயங்கிப் போகட்டும்..!!
_________________________________________


நிதமும் தானே
யுத்தம் செய்கிறேன்
என் காதலோடு...
தினமும் ஒரு முத்தமாவது
தந்து விட்டுப் போயேன்..!!
______________________________


"நொடிக்கொரு முறை
உன் மீது காதல்"
என்றேன்...
"நொடிக்கொரு முறை தானா...?
நொடிகள் தோறும் இல்லையா...?"
கன்னத்தில் கிள்ளி
கண்ணால் சிரிக்கிறாயே..!!
____________________________________