Friday, January 21, 2011

நிலவு ஒரு பெண்ணாக....!!!!


ஒவொரு பகலிலும் என்னை பார்த்து 
வெட்கம் கொண்டு 
ஒளிந்து கொள்கிறாள்...!!!
ஆனால்...
இரவின் மடியில் நான் அயர்ந்து 
உறங்கும் போது ....
என் அருகில்......
என்னை பார்த்தபடியே...!!!!!
நான் கண் விழிக்கும்போது...
மீண்டும் வெட்கம்...!!! 

காதல் சொல்ல வந்தேன்........

காதல் சொல்ல வந்தேன் உனிடம்...
கோபித்துக்கொள்வாய் என்று நண்பன் சொன்னான்....
சிகப்பு ரோஜாவை கை விட்டு வந்தேன் .....
(சமாதானத்திற்காக) கையில் வெள்ளை ரோஜாவுடன் ....!!!
"கண்ணே.... 
உன் கண்களால் என்னை எப்போதோ கைது செய்து விட்டாய்...
ஆனால் இதயத்திற்குள் சிறை வைக்க மறுக்கிறாயே..!!!!
முறைக்காதே கண்ணே...
நான் கொண்டு வந்த வெள்ளை ரோஜா..
உன் கோபத்தால் ஆனதோ சிவப்பு ரோஜா...!!! 

Monday, January 17, 2011

FRIENDS..... FOR EVER....

F ree from all formalities.....

R ight to say anything......

I nterminable affection.....

E ither good or bad......

N o sorry no thanks......

D ear to dearest one...!!!!!!!!!!!!!

காதல் ...காதல்....!!!!!!

என் எண்ணங்கள் யாவும் நீ... 
என் வண்ணங்கள் யாவும் நீ..
என் மனதினுள்ளும் நீ...
என் உயிரினுள்ளும் நீ..
என் திசைகளும் நீ..
என் அசைவுகளும் நீ..
என் தோட்டத்தில் மலரும் பூக்களும் நீ... 
அதன் முட்களும் நீ...
என் தோட்டத்தில் பூத்த முதற் பூவும் நீ...
அதில் சருகாகிப் போன என் முதல் இலையும் நீ..
என் உள்ளத்தில் பதிந்த முதல் உருவம் நீ..
என் உயிரில் உறைந்த முதற் காதலும் நீ..
மொத்தத்தில்...
நான் நினைக்கும் நினைவினில் சிரிக்கும் வடிவமும் நீ...!!!

Saturday, January 15, 2011

விழி மூடி உறங்கு
நீ விரும்பினால் .....
நான் விழித்திருக்கிறேன்....
உன் கனவுகளாக..!!!!!!
அழகாய்த்தான் இருக்கிறாய்...
ஆனால் ...
எனக்குத்தான் பயமாய் இருக்கிறது..!!
என் 100gm இதயத்திற்குள் 
உன்னை சிறைப்படுத்தி விடுவேனோ ..??
என்று..!!!!!!!! 

Wednesday, January 12, 2011

இடம் மாறிய இதயம்!!!


கண் மூடி சிரிக்கிறாய் ..
என்னை கண் விழித்து பார்க்கலாமே....
காதோரத்து கற்றை முடி 
சொல்லும் உன் காதில் ...
நீதான் என் உலகம் என்று...!
அதனால் தானோ?
நீ ... இரவாகவும் பகலாகவும் மாறி..மாறி...
என்னை இம்சிக்கிறாய்...
நீ மாலையாக இருப்பதையே..
( என் கழுத்தில் 
இரு கை கோர்பதையே) 

நான் யாசிக்கிறேன்...
உன்னை கண்டதும் 
உடைந்தது என் இதயம் மட்டும் அல்ல...
பாதியாக விட்டுப்போன என் வார்த்தைகளும் ..
தான்...!!!!!!